|Wed 27th May 2020 09:20 AM|Defence|
Page Views: 2
வன்னிப் மாவட்ட புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பெற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிறி, நேற்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு, காலை 10.30 மணிக்கு சென்ற கட்டளைத்தளபதிக்கு, சிங்கள மற்றும் தமிழ் முறையிலான வரவேற்பு வழங்கப்பட்டிருந்ததுடன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேனவும் வரவேற்றிருந்தார்.
இதன் போது, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
சுமார் 20 நிமிடங்கள், வன்னி மாவட்ட புதிய கட்டளைத் தளபதியுடன், அரசாங்க அதிபர் கலந்துரையாடியிருந்தார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.