கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி நேற்று புதன்கிழமை (செப்.,23) அன்று காலமானார்.
இவருக்கு கடந்த 11ல் கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த சில தினங்களாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (செப்.23) தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ் அங்கடி கர்நாடகாவின் பெலாகவி தொகுதி எம்.பி., யாக தேர்வானார். இவர் நான்கு முறை லோக்சாபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் சுரேஷ் அங்கடிக்கு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “சுரேஷ் அங்கடி ஒரு அர்ப்பணிப்புமிக்க பார்லி உறுப்பினர். திறமையான அமைச்சராக இருந்த அவரின் மறைவு வருத்தமளிக்கிறது.” என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ., தலைவர் சம்பித் பத்ரா, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிருஷ்ணன் ரெட்டி உள்ளிட்டோர் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
இதுவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய விவசாயத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ஜல சக்தி அமைச்சர் கஜேந்திரா சிங் ஷேக்வாட், பார்லி விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.