head


சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்!

|Friday, 25th September 2020|General| Page Views: 27

இவ்வாண்டு சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம், எங்கள் நாடு, எங்கள் கைகளில் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படித் தொனிப்பொருளில், ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியன்று சர்வதேச சிறுவர் தினத்தை, பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, பாடசாலைகளிலும் கொண்டாடவேண்டுமென, கல்வியமைச்சு சுற்றுநிரூபம் வெளியிட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை தினமாகவிருப்பதால், பாடசாலைகளில் ஒக்டோபர் 2ஆம், 5ஆம் திகதிகளில் இந்நிகழ்வுகளை, சுகாதார நடைமுறை விதிகளுக்கமைவாக நடத்தவேண்டுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீகே பெரேரோ அறிவித்துள்ளார்.

சிறுவர் தின தொனிப்பொருள் அடங்கிய பதாதைகளைக் காட்சிப்படுத்தல், கொரோனா வைரஸ் பாதுகாப்புத் தொடர்பிலும் தொனிப்பொருளுக்கமைவாக மாணவர் மத்தியில் அவர்களது ஆக்கத்திறன், அழகியல்திறன்களை மேம்படுத்துமுகமாக குறுநாடகம், வாத்திய இசை, பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.

மேலும், பாடசாலைச் சிறுவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பிலும் ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்தல் தொடர்பிலும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும் கல்வியமைச்சின் செயலாளர் கோரினார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.