head


கொரோனா கால பண்டிகைகள்: மோடி எச்சரிக்கை!

|Monday, 26th October 2020|| Page Views: 31

பண்டிகை கொண்டாட்டங்களில் கவனம் தேவை என்று பிரதமர் மோடி வற்புறுத்தியுள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மன்கி பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் மோடி. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 25) மோடி ஆற்றிய உரையில், இந்தியா இப்போது தசராவை கொண்டாடிவிட்டு அடுத்த பண்டிகைகளுக்கு நகர்கிறது. மேலும் பல்வேறு திருவிழாக்கள் வருவதால், மக்கள் கவனம் காட்ட வேண்டும், கொரோனா காலங்களில் இந்த புனிதமான பண்டிகைகளைக் கொண்டாடுவதில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

பண்டிகைகளுக்கு ஷாப்பிங் செய்யும் போது உள்ளூர் மக்களுக்கான குறைகளைத் தீர்ப்பதற்காக உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்
என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். படையினரின் பங்களிப்பு மற்றும் தேசத்திற்கு அவர்கள் செய்த சேவையை பிரதமர் பாராட்டினார். பண்டிகை காலங்களில் கூட எல்லைகளில் பாதுகாப்பாக நிற்கும் நமது வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த துணிச்சலான மகன்களையும் மகள்களையும் கௌரவிப்பதற்காக நாம் நம் வீடுகளில் ஒரு தீபத்தை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அக்டோபர் 31 ம் தேதி பிறந்த இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேலுக்கும் அவர் மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையும் மோடி நினைவு கூர்ந்தார்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.