head


பொது மக்கள் சேவை தொடரும்!

|Wednesday, 28th October 2020|General| Page Views: 16

கொவிட் அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி செயலகம் இதனை தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் சிந்தித்து தொலைப்பேசி, தபால் மற்றும் இணைய வழி மூலமாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் சேவை பிரிவை 0114-354550, 0112-354550 ஆகிய தொலைப்பேசி இலங்கங்களின் மூலம் தொடர்புக் கொள்ள முடியும்.

0112-338073 என்ற இலக்கத்தின் ஊடாக ஒம்புட்ஸ் மென் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் 0112-354354 என்ற இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்தை தொடர்புக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.