head


தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது!

|Wednesday, 28th October 2020|Defence| Page Views: 19

தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபிய அரசு வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், முகமது நபியின் உருவத்தை கார்ட்டூனாக வரைந்த சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்துக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்லாமிய விரோத, இஸ்லாம் வெறுப்புப் பதிவுகளைத் தடை செய்வது அவசியம். இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தைக் கிளப்பி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மார்க் ஸ{க்கர்பர்க்கிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களைப் படுகொலை செய்வது நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதமே அதிகமாகும். இஸ்லாமிய வெறுப்பைத் தடுக்க ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும். யூத விரோதம், படுகொலை, துவேஷம் ஆகியவற்றைத் தடை செய்ததுபோல் இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் நீங்கள் தடை விதிக்க வேண்டும் என்று இம்ரான்கான் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இத்தகைய கருத்தை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.