சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லடாக்கை கைப்பற்ற சீனா அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது. உலகின் மிகவும் பதற்றமான இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான சீன-இந்திய எல்லை (எல்ஏசி) தற்போது சீனாவில் கண்காணிக்கப்படுகிறது.
முன்னதாக சீனா சிறிய டிரோன்கள் மூலமாக இந்தியாவை அவ்வப்போது எல்லையில் கண்காணித்து வந்தது. தற்போது அதிநவீன ஆயுதங்கள் பொருந்திய போர் விமானங்களை இந்த எல்லையில் பறக்க விடுகிறது. தாங்கள் போர் விமானங்களை லடாக் எல்லைப் பகுதியில் பறக்க விடுவதாக சீனா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது இரு நாடுகள் இடையே மேலும் பகையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் வான் எல்லையில் அடிக்கடி சீனா அத்துமீறி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிறிய ரக விமானங்கள் மட்டுமல்லாமல் அதிக தொழில்நுட்பங்கள் கொண்ட பெரிய ஃபைட்டர் ஜெட்டுகளை வான்வெளியில் பறக்க விடுகிறது.
சீனாவின் பாதுகாப்புக்காக தாங்கள் எல்லைப்பகுதியில் இவ்வாறு செய்வதாக சீனா இதனை நியாயப்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.