மத்திய பட்ஜெட் பிப்., 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் மத்திய பட்ஜெட் பிப்.,1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,29ல் நடைபெறும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டிற்கு பிறகான முதல்கட்ட பார்லி., கூட்டம் பிப்.,15 வரையிலும், 2ம் கட்ட கூட்டம் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள எம்.பி.,க்கள் அனைவரும் 27, 28 தேதிகளில் பார்லி வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.