மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு!
|Monday, 01st March 2021||
Page Views: 2
தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பிப்ரவரி 28 வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய பொதுமுடக்கம் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமாக மாதம்தோறும் தொடர்ந்து நீட்டிக்கப்படு வருகிறது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.