head


கரோனா வார்டில் தீ விபத்து: 11 பேர் பலி!

|Sunday, 07th November 2021|| Page Views: 188

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தநிலையில் அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் தீ பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றப்பட்டனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

மகாராஷ்ட்ரா மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகாராஷ்ட்ர மாநிலம் அகமதுநகர் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது துயரத்தை தந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.