சர்வதேச மன்றம் ஊடாக இலங்கைக்கு நிதியுதவி வழங்க ஆலோசனை!
|Saturday, 14th May 2022|Political|
Page Views: 1
|
|
இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சில நாடுகளின் இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளே இவ்வாறு பிரதமருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது, புதிய பிரதமருக்கு குறித்த நாடுகளின் இராஜதந்திரிகள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
|
|