மலேசியாவின் புதிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து...........!
|2022-12-02 09:57:44|Political|
Page Views: 158
மலேசியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்றுக் (01) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே, தமது விருப்பமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வர் இப்ராகிம் கடந்த (24) தெரிவானார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.