இரண்டாம் நாளின் மதிய நேர இடைவேளை : 177 ஓட்டங்களை குவித்தது இலங்கை!
|2024-02-03 12:34:09|General|
Page Views: 136
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளின் மதிய நேர இடைவேளையின் போது இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகின்றது.
நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 80 ஓட்டங்களை குவிந்திருந்தது.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கி இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தபோது நிஷான் மதுஷக 37 ஓட்டங்களோடு நவீட் சத்ரானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்துவந்த குஷால் மெண்டிஸ் 10 ஓட்டங்களோடு நிஜாத் மசூத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது இலங்கை அணி 115 ஓட்டங்களை குவிந்திருந்தது.
இதேவேளை சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களோடு குவைசி அஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.