யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பெதுருதுடுவை செல்லும் வீதியில் நேற்று நெல் உலர்த்திக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பெதுருதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிகாமத்திலிருந்து பெதுருதுடுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் பெதுருதுடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மந்திகை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.