head


இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள் !

|2024-04-16 10:34:15|General| Page Views: 76

ஈரான் நாட்டுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் "பயங்கரமான மற்றும் ஒன்றுபட்ட" பதிலடியை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய இராணுவ தினத்தைக் குறிக்கும் வகையில், ஈரானின் ஆயுதப் படைகளின் வலிமைமிக்க தற்காப்பு மற்றும் தடுப்பு சக்தியை மௌசவி வலியுறுத்தி உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் ஈரானின் இராஜதந்திர வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், IRGC படையினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்று பெயரிடப்பட்ட முன்னோடியில்லாத இந்த வான்வழித் தாக்குதல், இஸ்ரேலிய அதிகாரிகளை அச்சுறுத்திய வகையில் அமைந்திருந்தது.

இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிரான ஈரானின் நடவடிக்கை ஈரானிய ஆயுதப் படைகளின் தீர்மானம் மற்றும் திறனின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியது என மௌசவி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை எதிராலியின் "சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்க்கமான பதிலடி" என்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு, குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.