எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விராசணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றத்தினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது ”குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.