head
Join Us


ரோகித் சர்மா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

|2024-06-30 12:12:29|General| Page Views: 123

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, இதுவே தனது இறுதி போட்டி எனவும், ஓய்வு பெற இதனை விட மிகச் சிறந்த தருணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோப்பையை வெல்ல வேண்டும் எனத் தான் விரும்பியதாகவும், அது நடந்து விட்டது எனவும், இதனால் தான் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்த சில மணிநேரத்திலேயே ரோகித் சர்மாவும் ஓய்வு முடிவு பற்றி அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.