மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் கைது செய்யப்பட்ட மதகுரு வெளிப்படுத்திய தகவல்
|2024-08-01 16:17:06|General|
Page Views: 91
மட்டக்களப்பு - ஓட்டமாவடி நாவலடி சந்தியில் இரண்டு ரி56 துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட மதகுரு விசாரணையின்போது சில தகவல்களை வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம்(30) கைது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, நடத்தப்பட்ட விசாரணைகளில், தாம் கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் மதகுருவாக கடமையாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததாகவும், துப்பாக்கி மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வம் காரணமாக அவற்றை தாம் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவர் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
முன்னதாக ஓட்டமாவடி நாவலடி பகுதியில் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் வழங்கிய தகவலின்படி,அதிகாரிகள் அவரது சகோதரரின் வீட்டிலும் சோதனை நடத்தினர், அங்கு மற்றொரு ரி56 துப்பாக்கி, ஒரு மெகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.