சீன அரசாங்கத்தால் யாழ்., மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சீன அரசாங்கத்தின் 1,500 மில்லியன் ரூபாய் நிதி உதவித் திட்டத்தின் கீழே வடக்கு- கிழக்கு மாகாண மீனவர்களுக்கு வலைகள் வழங்கும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வலைகள் தற்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு இணங்க யாழ்., மாவட்டத்திற்கு 26 ஆயிரத்து 700 வலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.