உலகிலுள்ள பிரபல்யமான மதஸ்தலங்களுள் ஒன்றான் ஜம்கறான் பள்ளிவாசலில் சிவப்பு கொடியைப் பறக்கவிடுவது என்பது, இரத்தம் சிந்தப்படுவதற்கான அடையாளமாகவும், இரத்தப்பழியைத் தீர்ப்பதற்கான ஒரு அடையாளமுமாகவே நீண்டகாலமாகப் பார்க்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், 'ஹமாஸ் தலைவர் இஸ்மயில் ஹணியே ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது கடுமையான பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும்' என்பதற்கான அடையாளமாகவே, ஜம்கறான் பள்ளிவாசலில் சிவப்புக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ஈரானிய ஊடகவியலாளர்கள்.
இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் பற்றி ஈரானில் இருந்தும், ஈரானின் துணை இராணுவக் குழுக்களிடம் இருந்தும் வெளிப்படுகின்ற எச்சரிக்கைகளும், பிரகடனங்களும், ஒரு மிகப் பெரிய யுத்தம் மத்திய கிழக்கில் மூழப்போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.