head
Join Us


21,160 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

|2024-10-22 09:39:52|General| Page Views: 46

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட 759,210 விண்ணப்பங்களில் 738,050 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.