யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Dr Ramanathan Arjuna ) இன்றைய நாடாளுமன்ற அமர்வில் போது குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதுஅர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி அநுர, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கடுமையாக தாக்கி உரையாற்றினார்.
யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும், வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதன்போது, அர்ச்சுனா அவருக்கு வழங்கப்பட்டிருந்த விடயத்தினை விடுத்து வேறு விதமாக தனது உரையை கொண்டு செல்வதாகவும் அது நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு முரணானது என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
அர்ச்சுனா தன்னை பேசுவதற்கு சபை அனுமதிக்கவில்லை என்றால் தன்னை வர வேண்டாம் என்று செல்லுங்கள் தான் வீட்டில் இருக்கிறேன் என குறிப்பிட்டார்.