செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்!

user 30-Jan-2025 இந்தியா 208 Views

இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான (INSV) தாரிணியில் பாயிண்ட் நெமோவைக் (Point Nemo) கடந்து இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் புதிய மைல்கல்லைத் தொட்டனர்.

கடற்படைக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் “Navika Sagar Parikrama II” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய கடல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“நவிகா சாகர பரிக்ரமா II” என்பது இந்திய கடலோர பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதி செய்யும் ஒரு கடல் ஆராய்ச்சி திட்டம் ஆகும்.)

இரு பெண் கடற்படை பணியாளர்களுடன் தாரிணி கப்பல் தனது பயணத்தை 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி கோவாவிலிருந்து ஆரம்பித்தது.

அது கடந்த டிசம்பர் 22 அன்று நியூசிலாந்தில் உள்ள லிட்டல்டன் துறைமுகத்தை அடைந்தது, பயணத்தின் இரண்டாம் கட்டத்தை முடித்தது.

குழுவினர் இந்த மாத தொடக்கத்தில் லிட்டல்டனில் இருந்து நீண்ட பயணத்திற்கு புறப்பட்டு, பால்க்லாந்து தீவுகளில் உள்ள போர்ட் ஸ்டான்லிக்கு சென்றனர்.

Related Post

பிரபலமான செய்தி