கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 சோதனை முகப்புக்கள்?

user 28-Jan-2025 இலங்கை 364 Views

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறைந்தது 20 சோதனை முகப்புக்களை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கூடுதல் சோதனை முகப்புக்களுக்கான இடங்களை தீர்மானிக்க விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுற்றுலாப் பயணிகளின் வருகை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

2028 ஆம் ஆண்டளவில் 12 மில்லியன் விமானப் பயணிகளை ஈர்க்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் மற்ற சர்வதேச விமான நிலையங்களில் உள்ள நிறுவனங்களையும் இலங்கைக்கு அழைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரசாங்கத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு கூறுகிறது.

Related Post

பிரபலமான செய்தி