அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பின்னர் போர்நிறுத்தம் குறித்து சாதகமான பதிலை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த வருடம் அமைதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பில் பெரும்பாலும் ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான உரையாடல் குறித்தே பேசப்பட்டுள்ளது.
ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பில் புடின் முதலில் முழுமையான போர்நிறுத்ததை நிராகரித்ததாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடரும் என்று அமெரிக்கா தெரிவிக்கின்றது.
இந்நிலையிலேயே, போர்நிறுத்தம் குறித்து சாதகமான பதிலை ஜெலென்ஸ்கி வழங்கியுள்ளார்.