தமிழின அழிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் !

user 28-Feb-2025 இலங்கை 157 Views

தமிழின அழிப்புக்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(27.02.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழின அழிப்புக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இதற்குக் காரணமானவர்கள் தற்போது சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறந்ததொரு அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதோடு எல்லை நிர்ணயத்தில் பாகுபாடு காட்டப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி