திருமணத்திற்கு தயாரான பெண்ணிற்கு அதிகாலையில் நேர்ந்த பெரும் சோகம் ; கோர விபத்தால் சிதைந்த குடும்பம்

user 16-Sep-2025 இலங்கை 25 Views

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பெண் , டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.   

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று (16) அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்று குழந்தைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும், டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு அழைத்து வருவதற்காக தவலமயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி