கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்..

user 19-Sep-2025 இலங்கை 44 Views

இலங்கை கடற்படை புலனாயவுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவரை செப்டம்பர் 24வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொல்கஹவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில்

2010 ஆம் ஆண்டு பொத்துஹெரவில் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பி;டத்தக்கது.

 

Related Post

பிரபலமான செய்தி