யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் மீது சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் தொல்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 3 சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் இருவர் நேற்று பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதோடு 3 வது உத்தியோகத்தருடன் எதிர் வரும் திங்கட்கிழமை சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.