2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனியார் வாகனங்கள் இறக்குமதி!

user 18-Dec-2024 இலங்கை 1175 Views

2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல்  தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2028ஆம் ஆண்டளவில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 2022 இல் இருந்த நிலைமைக்கு நாடு மீண்டும் செல்லாது எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

மேலும் 2028ஆம் ஆண்டு தமது அரசாங்கம் தான் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

Related Post

பிரபலமான செய்தி