மாயமான இரு இலங்கை மீனவர்களும் தமிழக கடற்படையினரால் மீட்பு!

user 20-Mar-2025 இலங்கை 83 Views

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த 15ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்றவேளை காணாமல் போயிருந்த நிலையில் ஜந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு அருகில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை அவதானித்த தமிழக கடலோர காவல் படையினர் அவர்களை படகுடன் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்திருந்தாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இருவரும் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்திருக்ககூடுமென தமிழக கடலோர காவல் படையினர் சந்தேக வெளியிட்டுள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதுடைய பூலோகதாசன் என்ற இருவருமே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் மாயமான நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி