திருமதி அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

user 30-Jan-2026 சர்வதேசம் 103 Views

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், கடந்த வருடம்  திருமதி உலக அழகியாக முடி சூடியமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி