மின் கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை யோசனை

user 15-Feb-2026 இலங்கை 60 Views

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணங்களை திருத்தியமைப்பதற்கான உத்தியோகபூர்வ யோசனையை இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.

தமது செலவுகளை ஈடுகட்டுவதற்காக 13.56% கட்டண அதிகரிப்பை மின்சார சபை இவ்வாறு கோரியுள்ளது.

மின்சார சபையின் மதிப்பீட்டின்படி, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான மொத்தச் செலவு ரூ. 136,531 மில்லியன் ஆகும். எனினும், தற்போதைய கட்டணங்களின்படி எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ. 116,889 மில்லியன் மட்டுமே என்பதால், சுமார் ரூ. 15,847 மில்லியன் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதி இடைவெளியை நிரப்பவே கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி