கடலுக்கு செல்லாதீர்..!

user 08-Jan-2025 இலங்கை 708 Views

பருத்தித்துறை கடலில் இன்றையதினம் கடற்படையினர் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிராந்திய  கடற் படையினர் இன்றையதினம்(8) பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான P421 கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ளவுள்னர். 

இன்று காலை,  09 மணியில் இருந்து இன்று மாலை 04 மணிவரை குறித்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதன்காரணமாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள்,  குறித்த பகுதிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாமென இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார். 

இதன்படி, இன்றையதினம் காலை 09 மணியிலிருந்து மாலை 04 மணிவரை 23.2NM north east of ppd,  Coordinate (s)of the location,  09°55'N:080°42E,  09°55N:080°36E,  09°51N:080°42E,  09°51N:080°36E ஆகிய கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென  கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

Related Post

பிரபலமான செய்தி