இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

user 10-Jan-2025 இலங்கை 661 Views

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க(Ranga dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவிடம் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்(Anura Kumara Dissanayake) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

 

 

Related Post

பிரபலமான செய்தி