இராணுவத்தினரின் உதவிகளை மீறி ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் கிராண் மக்கள் !

user 29-Jan-2025 இலங்கை 90 Views

கிரான் இப்பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பூரணான ஒத்துழைப்புக்களை வழங்கி மக்களுக்காக தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் பொதுமக்களின் கவனயினத்தால் பல மரணங்கள் இடம்பெற்றுவதாக பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வெள்ள அனர்த்த நிலைமை சம்பந்தமாக அப்பகுதியால் ஆபத்தான பிரயாணம் மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமான கள விஜயம் ஒன்றை பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் மேற்கொண்டு இருந்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலமை காரணமாக குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பிரதேச மக்கள் கடந்த 15 நாட்களாக தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன் இப்பகுதியில் இரு விவசாயிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு பின்பு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின் அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக இப்பகுதி இராணுவத்தினரும் பிரதேச செயலக ஊழியர்களும் தொடர்ந்து முற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் சில பொதுமக்கள் அவசரமாக செல்ல வேண்டி ஆபத்தான பாதைகளில் பயணிப்பதால் இருந்த உயிரனத்தம் ஏற்பட்டதாகவும் உயிரிழப்பு ஏற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு இழப்பீடுகளை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சித்திரவேல், தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பகுதி மக்கள் இரண்டு வாரங்களாக தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன தமக்கு நிரந்தரமான ஒரு பாலம் அமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். 

 

Related Post

பிரபலமான செய்தி