பாடசாலை கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம்

user 11-Oct-2025 இலங்கை 103 Views

பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பின் போது சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கமான சமூகத்திற்காக சட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி