இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

user 30-Nov-2025 இந்தியா 32 Views

இந்தியா கொல்கத்தாவில் இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகர புறவழிச்சாலை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (28) வயது இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த போது, அவளை ஒரு கார் மூலம் கடத்தி சென்றுள்ளனர்.

அந்த காரில் பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் ஒருவர் உட்பட மொத்தம் மூன்று பேர் இருந்தனர்.

பொதுவாக வெளிப்படாத இடத்தில் பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்தை கலந்து, அவர் விருப்பத்திற்கு எதிராக குடிக்க வைத்து பின்னர், மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னர், பெண்ணை இறக்கிவிட்டு, மூவரும் தப்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பொலிஸார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் பொதுமக்களிடம், சந்தேக நபர்களைப் பற்றிய தகவல் இருப்பின் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி