இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நாளை (14) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு (Jaffna) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் நாளை காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.
ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரின் மத்தியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெறும் நிகழ்விலும் அவர் பங்குகொள்ள உள்ளார்.