இரத்தினபுரியில் மூத்த சகோதரர் தனது தம்பியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் அலுபத்கல, உடனிரியெல்ல பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவருக்கும், மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்தக் கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூத்த சகோதரர் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தாய் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.