பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் !

user 17-Jan-2025 இலங்கை 336 Views

பேராதனைப் பல்கலைக்கழக பொது மாணவர் சங்கம் மற்றும் பீட மாணவர் சங்கங்களில் மாணவர்கள் ஒன்றுகூடுதல், கூட்டங்கள் நடத்துதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரியாவிடை விருந்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாணவர்களும் பேராதனைப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, ஆபத்தான நிலையில் இருந்த ஒரு மாணவர் அறுவை சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், 15 ஆம் திகதி இரவு மாணவர்கள் மீண்டும் மோதலுக்குத் தயாராகி வருவதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாம் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எதிர்வரும் தேர்வுகளின் போது பல்கலைக்கழகத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதைத் தடுப்பதற்கும் கவனம் செலுத்தியுள்ளனர்.

 

Related Post

பிரபலமான செய்தி