கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ரவி பத்திரவிதான ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்று (22) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாண பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.