இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றைய தினம்(24) 11மணியளவில் கூடவுள்ளது.
குறித்த கூட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு, தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, அதிகார பகிர்வு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.