பிரதேச செயலகங்களிலுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புக !

user 05-Mar-2025 இலங்கை 438 Views

முல்லைத்தீவு மாவட்டசெயலகம் மற்றும் பிரதேசசெயலகங்களில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக140 உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பித்தருமாறு பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசசபையின்கீழ் காணப்படும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை தனிப் பிரதேசசபையாக உருவாக்குமாறும், மாவட்டசெயலக கட்டடவேலையின் இரண்டாங்கட்ட பணிகளையும் விரைந்து ஆரம்பிக்கமாறும் இதன்போது மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று  (04.03.2025) இடம்பெற்ற பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி