பொலிஸ் துறையில் இணைய விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு...

user 25-Jun-2025 இலங்கை 59 Views

இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர்  மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, 2025 ஜூன் 20ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரிகள், தங்கள் விண்ணப்பங்களை இலக்கம் 375, முதல் மாடி, ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி மாவத்தை, கொழும்பு 06 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்கள், 2025 ஜூலை 21 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன் அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

Related Post

பிரபலமான செய்தி