இலங்கையின் தேயிலைத் தோட்ட பகுதியிலுள்ள தாவரங்கள், விலங்கினங்களைப் பாதுகாத்தல்

user 14-Jan-2026 இலங்கை 18 Views

இலங்கையின் தேயிலைத் தோட்டப் பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு வாழும் புகலிடமாக உள்ளது. பல பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) தீவிரமாகச் செயற்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மீட்டெடுக்கின்றன. இதன் மூலம், தோட்டப் பயிர்களுடன் செழித்து வளரும் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கின்றன. இயற்கை வனங்கள் மற்றும் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பது முதல், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது வரை, இந்தப் பெருந்தோட்டங்கள் பல்லுயிர்ப் பெருக்கமும் தேயிலையும் இணைந்து செழிக்கக்கூடிய சூழலை வழங்குகின்றன.

Bogawantalawa Tea Estates PLCஇல் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பைப் பேணுதல்

Bogawantalawa Tea Estates PLC ஆனது, பல்லுயிர் பாதுகாப்பை தனது பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் ஒரு மையத் தூணாக ஆக்கியுள்ளது. 7,000 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தோட்ட நிலப்பரப்பில் பரவியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கி, 75 ஹெக்டேயர் நிலப்பரப்பை உத்தியோகபூர்வமாகப் பாதுகாப்பின் கீழ் இந்நிறுவனம் வைத்துள்ளது. இதன் திட்டங்களில் வாழ்விடத்தை மீட்டெடுத்தல், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்குதல், ஆக்கிரமிப்பு இனங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஊழியர்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகங்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகள் உறுதியான முடிவுகளை அளித்துள்ளன சமூக ஈடுபாட்டில் 42% அதிகரிப்பு ஆகியவை : அடிப்படை மட்டங்களுடன் ஒப்பிடுகையில் இனச்செறிவில் 18% முன்னேற்றம், 37 இற்கும் மேற்பட்ட வாழ்விட அலகுகளை மீட்டெடுத்தல் இதில் அடங்கும்.

Related Post

பிரபலமான செய்தி