தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 233 சந்தர்ப்பங்களில் கைதிகளை தமது வீடுகளில் பணிக்கு அமர்த்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
சிறைக்காவலர்களின் 234 மனித நாட்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
இதன்போது, சிறைச்சாலை தலைமையகத்தின் 09 வாகனங்கள் 62 தடவைகளில் 372 கிலோமீற்றர் தூரம் சென்று கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைகள் மேலதிக நேரச் செலவுகளை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாலும், 2023ஆம் ஆண்டில் மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளுக்காக 982 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.