வடக்கு, கிழக்கில் சுயநிர்ணயம், சுயாட்சி அடிப்படையில் நாங்கள் வாழக்கூடிய ஒரு தினத்தினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஏற்படுத்தி தர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் (Gnanamuttu Sirinesan) தெரிவித்துள்ளார்.
கடந்த (1) ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெப்ரவரி நான்காம் திகதி எமது நாட்டின் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.இந்த நேரத்தில் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
சுதந்திரம் என்பது சொற்களாலோ சோடனை கடதாசிகளாலோ, சுதந்திர கீதத்தாலோ அலங்கரிக்கப்படுகின்ற ஒரு காட்சி பொருள் அல்ல.எமது உணர்வு ரீதியாக செயற்பாட்டு ரீதியாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு விடயம். அந்த வகையில் பார்க்கின்ற போது. கடந்த காலத்தில் நாங்கள் சுதந்திரத்தை பெற்றிருந்தாலும் கூட. உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை.
கிட்டத்தட்ட 76 ஆண்டுகளாக அந்த சுதந்திரத்தை பேச்சளவில் பேசி கொள்கின்றோம்.செயற்பாட்டளவில் அனுபவிக்கவில்லை அந்த வகையில் சொல்லப்போனால் இன்றைய நிலையில் யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 2009 க்கு பின்னர் நாங்கள் 16 ஆண்டுகள் கடந்து இருக்கின்றோம்.
கண்களை மூடி இருக்கின்றார்கள். சுதந்திரத்திற்காக ஏங்கியவர்கள் சுதந்திரம் இல்லாமலே கண்களை மூடி இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஒரு சுதந்திரமான தினத்தை புதிய ஆட்சியாளர்கள், சிவப்பு கட்சியினர், இடது சாரியினர் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்களும் எங்களை ஏமாற்றுபவராக இருந்ததால். தொடர்ந்தும் இந்த சுதந்திர தினத்தினை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணிகள் பறி கொடுத்தவர்கள் அதேபோன்று தமது மேய்ச்சல் தரையினை இழந்தவர்கள் பல்வேறு ஒடுக்கு வாரத்திற்கு உட்பட்டவர்கள் இது தமிழ் இனம் அன்றைய நாளில் ஒரு துக்க தினமாக மட்டக்களப்பு மக்கள் அனுஷ்டிப்பார்கள் என இந்த இடத்தில் நாங்கள் கூறிக் கொள்கின்றோம்.
ஒரு பொழுதுபோக்காக இதனை செய்யவில்லை எங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு துன்பியல் தினமாக அதனை பிரகடனப்படுத்தி இருக்கின்றோம் என்பதனை இந்த இடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.