இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது.
இது 2025 ஒக்டோபர் 21 முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி,
பச்சை அரிசி; கிலோ ஒன்றுக்கு 210 ரூபா
நாட்டு அரிசி; கிலோ ஒன்றுக்கு 220 ரூபா
சம்பா அரிசி: கிலோ ஒன்றுக்கு 230 ரூபா
பொன்னி சம்பா (கீரி சம்பாவுக்கு சமம்); ஒரு கிலோவுக்கு 240 ரூபா
பால் பொன்னி 255 ரூபா
எந்தவொரு இறக்குமதியாளரோ, விநியோகஸ்தரோ அல்லது வர்த்தகரோ இந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்கவோ அல்லது வழங்கவோ கூடாது என்றும் வர்த்தமானி கூறுகிறது.